லைட் ஹவுஸ் திட்டங்கள் இந்தியாவில் புதிய தலைமுறைக்கான சிறந்த உலகளாவிய மாற்றுத் தொழில்நுட்பங்கள், பொருட்கள் மற்றும் செயல்முறைகள் முதன்முறையாக கட்டுமானத் துறையில் பெரிய அளவில் வரவுள்ளதை எடுத்துக் காட்டுகின்றன.
இவை உலகளாவிய வீட்டுவசதித் தொழில்நுட்ப சவால்-இந்தியா (Global Housing Technology Challenge - GHTC) என்பதின் கீழ் கட்டப்பட்டு வருகின்றன.
2019 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்ட இது பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (நகரம்) என்ற திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப் படுகிறது.
GHTC ஆனது வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்தினால் தொடங்கப் பட்டது.
இது குஜராத்தின் ராஜ்கோட், உத்தரப் பிரதேசத்தின் லக்னோ, மத்தியப் பிரதேசத்தின் இந்தூர், ஜார்க்கண்டின் ராஞ்சி, தமிழ்நாட்டின் சென்னை மற்றும் திரிபுராவின் அகர்தலா ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்படும்.