வணிகம் 20 நிகழ்வின் தொடக்கக் கூட்டமானது குஜராத் மாநிலத்தின் காந்தி நகரில் தொடங்கியது.
இது G20 மாநாட்டின் ஒரு பகுதியாக நடத்தப்படுகிறது.
இந்தக் கூட்டத்திற்கு டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.
B20 இந்தியா 2023 என்ற பேச்சுவார்த்தையானது, ‘RAISE’ என்ற கருத்துருவின் கீழ் நடைபெறுகிறது.
பொறுப்பு மிக்க, துரிதப்படுத்தப்பட்ட, புதுமைமிக்க, நிலையான மற்றும் சமமான வணிகம் என்பதன் சுருக்கமே RAISE என்பதாகும்.
இந்தக் கூட்டத்தில் G20 நாடுகளின் பிரதிநிதிகள், வணிகப் பிரதிநிதிகள், தலைமை நிர்வாக அதிகாரி, இரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முதல் முறையாக, இந்தச் சந்திப்பில் ஆப்பிரிக்க நாட்டிற்கானச் சிறப்புப் பணிக்குழு இடம் பெற்றுள்ளது.
இந்தியாவின் G20 பிரதிநிதி நிதி ஆயோக் அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் ஆவார்.
பருவநிலை இலக்குகளை அடைவதில் சிறப்பாக செயல்படும் முதல் ஐந்து நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இடம் பெற்றுள்ளதோடு, இந்த இடத்தைப் பெற்ற ஒரே G20 அமைப்பு சார்ந்த நாடும் இதுவாகும்.