2019 ஆம் ஆண்டின் ஷில்ப உத்சவ் நிகழ்ச்சியானது புது தில்லியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இது சமூகத்தில் உள்ள நலிவடைந்த பிரிவுகளைச் சேர்ந்த, நாடு முழுவதும் உள்ள கைவினைக் கலைஞர்களின் ஒரு வருடாந்திரக் கண்காட்சியாகும்.
இந்தக் கைவினைஞர்கள் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் தலைமை நிறுவனங்களால் உதவி பெறுகின்றார்கள்.
இந்தக் கண்காட்சியில் பட்டுப் புடவைகள், பருத்தி வகையைச் சேர்ந்த கம்பளிப் பொருள்கள், ஆயத்த ஆடைகள், மட்பாண்டப் பொருள்கள், சணல் பொருட்கள், பளிங்குக் கலைப் பொருட்கள் மற்றும் கைத்தறிப் பொருட்கள் போன்றவை இடம் பெறுகின்றன.