மத்தியப் பழங்குடியின விவகாரங்கள் துறை அமைச்சகமானது தனது “தகவல் தொழில்நுட்பத்தினால் செயல்படுத்தப்படும் நிதியுதவித் தட்டங்களின் மூலம் பழங்குடியினருக்கு அதிகாரமளித்தல்” என்ற திட்டத்திற்காக ஸ்காச் தங்க விருதினைப் பெற்றுள்ளது.
இது ஸ்காச் என்ற ஒரு சுயாதீன அமைப்பால் வழங்கப்படும் நாட்டின் ஒரு உயரிய குடிமை விருதாகும்.
இது இந்தியாவை ஒரு சிறந்த தேசமாக உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட மக்கள், திட்டங்கள் மற்றும் நிறுவனங்களை அங்கீகரிக்கின்றது.
இது நிறுவனங்கள்/அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் ஆகியோர்களுக்கு வழங்கப் படுகின்றது.