TNPSC Thervupettagam

2017-2019 காலகட்டத்தில் பயிர்கள் இழப்பு

February 15 , 2021 1619 days 591 0
  • இந்தியாவானது 18.176 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பில் மிகப்பெரிய அளவிலான பயிர்கள் இழப்பினைச் சந்தித்து இருக்கின்றது.
  • இது மொத்த நிகர அளவில் பயிரிடப்பட்ட பகுதியில் 8.5% என்ற அளவில் பாதிக்கப் பட்டுள்ளது.
  • பயிர்கள் இழப்பானது 2017 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில்  ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக நிகழ்ந்துள்ளது.
  • மொத்த இழப்புகளில், ஏறத்தாழ 10.68 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பானது 2019 ஆம் ஆண்டில் மட்டும் பாதிப்படைந்துள்ளது.
  • இந்தத் தரவின்படி, வெள்ளம் ஏற்படக் கூடிய மாநிலங்களான பீகார், அசாம், உத்தரப் பிரதேசம் ஆகியவை மிகக் கடுமையான வெள்ளத்தைச் சந்தித்துள்ளன.
  • மிகக் கடுமையான வெள்ளமானது கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் இராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் நிகழ்ந்துள்ளது.
  • இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிடையே மத்தியப் பிரதேசமானது மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
  • இந்த மாநிலங்கள் 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் சுழிய ரீதியிலான அளவிலேயே பயிர்கள் இழப்பைப் பதிவு செய்து இருந்தன.
  • ஆனால் 2019 ஆம் ஆண்டில் மட்டும் அவை 6.047 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பில் அதிக இழப்பைச் சந்தித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்