இது மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறையினால் வெளியிடப் பட்டு உள்ளது.
இந்த விதிகள் ஆளில்லா விமான (UA - Unmanned Aircraft) அமைப்புகள் மற்றும் குட்டி விமானங்களின் உற்பத்தி, இறக்குமதி, வர்த்தகம், உரிமை மற்றும் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
விபத்து ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை ஏற்கும் வகையில் தகுதியுடைய மூன்றாம் நபர் காப்பீட்டுக் கொள்கை இருந்தாலொழிய எந்தவொரு UAயும் இந்தியாவில் செயல்பட அனுமதிக்கப் படமாட்டாது.
250 கிராம் அல்லது அதற்குக் குறைவான எடை கொண்ட நானோ ஆளில்லா குட்டி விமானங்கள் ஆளில்லா குட்டி விமானத்திற்கான விமானி ஓட்டுனர் உரிமம் எதுவும் இல்லாமல் கூட செயல்பட அனுமதிக்கப்படும்.