2023 ஆம் ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் இணையதளம் மற்றும் கருத்துரு
November 27 , 2022 902 days 389 0
2023 ஆம் ஆண்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைமைப் பொறுப்பினை ஏற்று அடுத்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டை நடத்த உள்ளதால் அதற்கான அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை இந்தியா அறிமுகப் படுத்தி உள்ளது.
அடுத்த ஆண்டு இந்தியாவின் தலைமையின் கீழ் மேற்கொள்ளப்படும் நிகழ்வுகளை இந்த இணையதளம் குறிப்பிட்டுக் காட்டுகிறது.
இந்த மாநாட்டின் கருத்துரு, "பாதுகாப்பான (SECURE) ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு" என்பதாகும்.
இதில் குடிமக்களுக்கான பாதுகாப்புக்கு ‘S’, பொருளாதார மேம்பாட்டிற்கு ‘E’, பிராந்தியத்தில் இணைப்பு வசதிக்கு ‘C’, ஒற்றுமைக்கு ‘U’, இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு ‘R’, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ‘E' ஆகிய எழுத்துக்கள் குறிக்கப் படுகின்றன.
உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் சுழற்சி முறை தலைமைப் பதவியை இந்தியா பெற்றது.
இந்தியா 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை ஓராண்டு காலத்திற்கு தலைமைப் பதவியினை வகிக்கும்.