சென்னையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான மோகனா சுந்தரி என்பவர் பாலினச் சமத்துவத்தை ஊக்குவித்ததற்காக 2025 ஆம் ஆண்டிற்கான கம்லா பாசின் விருதை (தெற்காசியா) பெற்றார்.
தமிழ்நாட்டிலிருந்து மிக முதல் முறையாக இந்த விருதைப் பெற்றவர் இவரே ஆவார் என்பதோடுநேபாளத்தின் காத்மாண்டுவில் அவர் இந்த விருதைப் பெற்றார்.
இந்த விருதை ஆசாத் அறக்கட்டளை, இந்தியத் தேசிய அறக்கட்டளை மற்றும் ஐபார்ட்னர் இந்தியா ஆகியவை நிறுவியுள்ளன.
மோகனா 600க்கும் மேற்பட்ட பெண் ஆட்டோ ஓட்டுநர்களைக் கொண்ட ஒரு கூட்டுறவு நிறுவனமான வீரப் பெண்கள் முன்னேற்ற சங்கத்தின் (VPMS) தலைவராக உள்ளார்.
VPMS ஆனது, நிதி நிலைத்தன்மை, அவசர நிதி மற்றும் ESI (ஊழியர்களின் மாநிலக் காப்பீடு) மற்றும் PF (வருவாய் நிதி) போன்ற திட்டங்களுக்கான அணுகலுடன் பெண் ஓட்டுநர்களை ஆதரிக்கிறது.