2035 ஆம் ஆண்டிற்குள் முக்கியத் துறைமுகங்களில் பசுமை ஹைட்ரஜன் கிடங்குகள் மற்றும் எரிபொருள் நிரப்பும் மையங்களை நிறுவுவதற்கு இந்தியா காலக்கெடு விதித்து உள்ளது.
உலகிலேயே அதிகளவில் பசுமை இல்ல வாயுக்களை வெளியேற்றும் நாடுகளில் ஒன்றான இந்தியா, 2070 ஆம் ஆண்டிற்குள் உமிழ்வு அளவினை நிகரச் சுழியமாகக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
துறைமுகங்களில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பங்கானது 2030 ஆம் ஆண்டில் 60% ஆகவும், 2047 ஆம் ஆண்டில் 90% ஆகவும் இருக்க வேண்டும்.
COP 26வது பங்குதாரர்கள் மாநாட்டில் பருவநிலை நடவடிக்கைக்கான அதன் உறுதிப் பாட்டின் ஒரு பகுதியாக, 2030 ஆம் ஆண்டிற்குள் 2005 ஆம் ஆண்டிலிருந்த அளவை விட மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஓர் அலகிற்கு உமிழ்வு தீவிரத்தை 45% வரை குறைக்க உள்ளதாக இந்தியா உறுதியளித்துள்ளது.
வர்த்தக அளவில் 95% பங்கு மற்றும் வர்த்தக மதிப்பில் 65% பங்குடன் ஒட்டு மொத்த வர்த்தகம் மற்றும் வளர்ச்சியில் நாட்டின் கடல்சார் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது.