TNPSC Thervupettagam

2035 ஆம் ஆண்டிற்குள் பசுமை ஹைட்ரஜன் கிடங்குகள்

May 19 , 2023 760 days 394 0
  • 2035 ஆம் ஆண்டிற்குள் முக்கியத் துறைமுகங்களில் பசுமை ஹைட்ரஜன் கிடங்குகள் மற்றும் எரிபொருள் நிரப்பும் மையங்களை நிறுவுவதற்கு இந்தியா காலக்கெடு விதித்து உள்ளது.
  • உலகிலேயே அதிகளவில் பசுமை இல்ல வாயுக்களை வெளியேற்றும் நாடுகளில் ஒன்றான இந்தியா, 2070 ஆம் ஆண்டிற்குள் உமிழ்வு அளவினை நிகரச் சுழியமாகக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • துறைமுகங்களில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பங்கானது 2030 ஆம் ஆண்டில் 60% ஆகவும், 2047 ஆம் ஆண்டில் 90% ஆகவும் இருக்க வேண்டும்.
  • COP 26வது பங்குதாரர்கள் மாநாட்டில் பருவநிலை நடவடிக்கைக்கான அதன் உறுதிப் பாட்டின் ஒரு பகுதியாக, 2030 ஆம் ஆண்டிற்குள் 2005 ஆம் ஆண்டிலிருந்த அளவை விட மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஓர் அலகிற்கு உமிழ்வு தீவிரத்தை 45% வரை குறைக்க உள்ளதாக இந்தியா உறுதியளித்துள்ளது.
  • வர்த்தக அளவில் 95% பங்கு மற்றும் வர்த்தக மதிப்பில் 65% பங்குடன் ஒட்டு மொத்த வர்த்தகம் மற்றும் வளர்ச்சியில் நாட்டின் கடல்சார் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்