TNPSC Thervupettagam

22வது சட்ட ஆணையம்

February 21 , 2020 1909 days 1033 0
  • இந்தியாவின் 22வது சட்ட ஆணையத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்த ஆணையமானது மூன்று ஆண்டு காலம் செயல்படுவதற்கு ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது.
  • 22வது சட்ட ஆணையமானது முழுநேரத் தலைவரைக் கொண்டிருக்கும்.
  • இது நான்கு முழுநேர உறுப்பினர்களைக் கொண்டிருக்கும். மேலும் சட்ட விவகாரங்கள் துறை மற்றும் சட்டமன்றத் துறை ஆகியவற்றின் செயலாளர்களும் இந்த ஆணையத்தில் இடம் பெறுவர்.

சட்ட ஆணையங்கள்

  • இது ஒரு சட்டரீதியற்ற ஒரு அமைப்பாகும். இது அவ்வப்போது இந்திய அரசால் அமைக்கப் படுகின்றது.
  • இது 1955 ஆம் ஆண்டில் முதல் முறையாக அமைக்கப்பட்டது.
  • இதன் பின்னர் ஒவ்வொரு 3 வருடங்களுக்கு ஒரு முறை இது  அமைக்கப்படுகின்றது.
  • இதுவரை, இந்திய சட்ட ஆணையமானது 277 அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்