TNPSC Thervupettagam

3வது உலக புதுப்பிக்கத் தக்க ஆற்றல் முதலீட்டுச் சந்திப்பு மற்றும் கண்காட்சி (RE-Invest 2020)

December 1 , 2020 1695 days 649 0
  • இந்த மாநாடானது மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை அமைச்சகத்தினால் (Ministry of New and Renewable Energy - MNRE)  நடத்தப்படுகின்றது.
  • 2020 ஆம் ஆண்டிற்கான இந்த மாநாட்டின் கருத்துரு, “நீடித்த ஆற்றல் மாற்றத்திற்கான புத்தாக்கம்” என்பதாகும்.
  • ஆஸ்திரேலியா, பிரான்சு, டென்மார்க், ஜெர்மனி, ஐக்கியப் பேரரசு, மாலத் தீவுகள், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகியவை Re-Invest மாநாட்டின் பங்காளர் நாடுகளாகும்.
  • குஜராத், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், இராஜஸ்தான் மற்றும் தமிழ்நாடு ஆகியவை இதன் பங்காளர் மாநிலங்களாகும்.
  • இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித் திறனானது உலகின் 4வது மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித் திறனாகும்.
  • இது அனைத்து மிகப்பெரிய பொருளாதார நாடுகளிடையே மிக அதிக வேகத்தில் வளர்ந்து வருகின்றது.
  • தற்பொழுது இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி திறனானது 136 ஜிகா வாட்களாக உள்ளது.
  • இது நமது மொத்தத்  திறனில் 36% ஆகும்.
  • இந்தியாவின் வருடாந்திர ஆற்றல் உற்பத்தித் திறனானது 2017 ஆம் ஆண்டு முதல் நிலக்கரியை அடிப்படையாகக் கொண்ட மின்னாற்றலை விட முன்னிலையில் உள்ளது.
  • கடந்த 6 ஆண்டுகளில், இந்தியாவானது இரண்டரை மடங்கு என்ற அளவில் நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித் திறனை அதிகரித்துள்ளது.
  • புனல் (நீர்) மின்சாரமானது மத்திய மின்சாரத் துறை அமைச்சகத்தினால் தனியாக நிர்வகிக்கப் படுகின்றது. அதனால் இது MNRE திட்டங்களில் இணைக்கப் படவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்