75வது உலக சுகாதார மாநாடானது சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடத்தப் பட்டு வருகிறது.
கோவிட்-19 பெருந்தொற்று பரவத் தொடங்கிய பிறகு நேரடியாக நடத்தப்படும் முதல் சுகாதார கூடுகை இதுவாகும்.
"அமைதிக்கான ஆரோக்கியம், ஆரோக்கியத்திற்கான அமைதி" என்பது இந்த ஆண்டு மாநாட்டின் கருத்துருவாகும்.
இந்தியாவில் சுகாதாரப் பாதுகாப்புச் சேவை வழங்கும் முன்களப் பணியாளர்களாக விளங்கும் இந்தியாவின் ஒரு மில்லியன் ஆஷா (அங்கீகாரம் பெற்ற சமூகச் சுகாதாரப் ஆர்வலர்) பணியாளர்கள், 2022 ஆம் ஆண்டிற்கான உலக சுகாதாரத் தலைவர்கள் என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.