சமீபத்தில் இது ஜப்பானின் டோக்கியோ நகரில் நடத்தப் பட்டது.
குவாட் அல்லது நாற்கரப் பாதுகாப்புப் பேச்சுவார்த்தை அமைப்பு என்பது இந்தியா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளை உள்ளடக்கிய குழுவாகும்.
இது அவ்வப்பொழுது நடைபெறும் உச்சிமாநாடுகள், தகவல் பரிமாற்றம் மற்றும் இராணுவ பயிற்சிகளைக் கொண்ட ஒரு உத்திசார் மன்றமாகும்.
பயங்கரவாதம், தவறான தகவல் மற்றும் பிராந்தியத் தகராறுகள் போன்ற அச்சுறுத்தல்களைப் பற்றி முன்னிலைப்படுத்தும் ஓர் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தினை உருவாக்குவதே இந்த உச்சிமாநாட்டின் முக்கிய மையக் கருத்தாகும்.