தாய்லாந்து நாட்டினால் நடத்தப்பட்ட 6வது பல்துறை மற்றும் தொழில்நுட்பம் மீதான ஒத்துழைப்புக்கான (BIMSTEC) வங்காள விரிகுடா உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் உரையாற்றினார்.
இந்த நிகழ்வின் கருத்துரு 'BIMSTEC: Prosperous, Resilient and Open' என்பதாகும்.
இந்த நிகழ்வில் பாங்காக் தொலைநோக்குத் திட்டம் 2030 மற்றும் அதன் உறுப்பினர் நாடுகளுக்கு இடையே இணைப்பு மற்றும் ஈடுபாட்டை அதிகரிப்பதற்கான கடல் சார் போக்குவரத்து ஒப்பந்தம் ஆகியவை ஏற்றுக் கொள்ளப் பட்டது.
இந்தியப் பிரதமர் BIMSTEC உச்சி மாநாட்டில் 21 அம்சங்கள் செயல் திட்டத்தினை முன் மொழிந்தார்.
இது பிராந்திய இணைப்பு, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பல்வேறு தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
BIMSTEC அமைப்பின் உறுப்பினர் நாடுகளின் பண வழங்கீட்டு முறைகளுடன் சேர்த்து இந்தியாவின் ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுகத்தினை (UPI) இணைப்பதும் இதில் அடங்கும்.
இக்குழுவின் உறுப்பினர் நாடுகளிடையே ஈடுபாட்டை வலுப்படுத்துவதற்காக BIMSTEC வர்த்தக சபை அமைக்கப்படவுள்ளது.
அவர் மனித வள உள்கட்டமைப்பு முன்னெடுப்பின் (BODHI) ஒழுங்கமைக்கப்பட்ட மேம்பாட்டிற்கான BIMSTEC முன்னெடுப்பினை முன்மொழிந்தார்.
இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும், BIMSTEC நாடுகளைச் சேர்ந்த 300 இளைஞர்களுக்குப் பயிற்சி அளிப்பதை இலக்காகக் கொண்டுள்ளது.
அவர் BIMSTEC உறுப்பினர் நாடுகளுக்காக சிறிய செயற்கைக்கோள்களை உருவாக்கும் ஒரு திட்டத்தினை முன்மொழிந்தார் என்பதோடு தரைக் கட்டுப்பாட்டு நிலையங்களை நிறுவுவது குறித்து ஆராய்வதோடு தொலை உணர்வு தரவைப் பயன்படுத்துவதையும் ஊக்குவித்தார்.
இந்தியாவில் நீடித்த நிலையான கடல் சார் போக்குவரத்து மையத்தினை நிறுவும் திட்டத்தினையும் அவர் முன்மொழிந்தார்.
நாளந்தா பல்கலைக்கழகத்தில் ஒவ்வோர் ஆண்டும் BIMSTEC நாடுகளைச் சேர்ந்த இளம் அரசுமுறை அதிகாரிகளுக்குப் பயிற்சி வழங்கும் திட்டம் மற்றும் இந்திய வன ஆராய்ச்சி நிறுவனத்தில் BIMSTEC நாடுகளின் மாணவர்களுக்கான உதவித் தொகை அறிவித்தார்.
டாடா நினைவு மையம் ஆனது, BIMSTEC நாடுகளில் புற்றுநோய் சிகிச்சையில் பயிற்சி மற்றும் திறனை வளர்ப்பதை ஆதரிக்கும்.
இந்தத் திட்டத்தின் படி, இணைப்பு மற்றும் கலாச்சாரத்தினை மேம்படுத்துவதற்காக இந்த ஆண்டு இந்தியாவில் BIMSTEC பாரம்பரிய இசை விழா நடத்தப்படும்.
மின்சாரக் கட்டமைப்பு ஒருங்கிணைப்பு தொடர்பானப் பணிகளை விரைவுப்படுத்த உள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்தியா இந்த ஆண்டு BIMSTEC தடகளப் போட்டியை நடத்த உள்ளதாகவும், BIMSTEC அமைப்பின் 30வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் 2027 ஆம் ஆண்டில் BIMSTEC விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்வதாக முன்மொழியப்பட்டுள்ளது.