BRICS தடுப்பு மருந்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம்
March 25 , 2022 1165 days 498 0
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் மான்சுக் மாண்டவ்யா BRICS தடுப்பு மருந்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தினைத் தொடங்கி வைத்துள்ளார்.
புதிதாக தொடங்கப்பட்ட இந்த மையமானது பரஸ்பர நன்மைகளுக்காக நாடுகளுக்கு இடையில் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு ஒத்துழைப்பு மேற்கொள்ள முயலும்.
சீனாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் வாங் சிகாங் இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார்.
உலக சுகாதார அமைப்பின் 65-70% தடுப்பு மருந்துத் தேவையினை இந்தியா பூர்த்தி செய்வதோடு 150க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் தடுப்பு மருந்துகளை விநியோகம் செய்கிறது.
BRICS நாடுகளுக்காகவும் உலகின் பிற நாடுகளுக்காகவும் தடுப்பு மருந்துகளை உருவாக்கச் செய்வதற்கு வேண்டி இந்தியா தனது தடுப்பு மருந்து உற்பத்தி தொழில் துறையை அர்ப்பணிக்கும்.