TNPSC Thervupettagam

E-100 எத்தனால் திட்டம்

June 10 , 2021 1522 days 1848 0
  • பிரதமர் மோடி அவர்கள் E-100 திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
  • இந்தியாவில் எத்தனால் உற்பத்தி மற்றும் வழங்கீடு போன்றவற்றிற்கான ஒரு பிணையத்தை உருவாக்கும் நோக்கில் இந்தத் திட்டமானது தொடங்கப்பட்டுள்ளது.
  • மேலும் இந்தியாவில் எத்தனால் கலவை திட்டத்திற்கான செயல்திட்டம் மீதான நிபுணர் குழுவின் அறிக்கையினையும் (2020-2025) பிரதமர் வெளியிட்டார்.
  • இது உலக சுற்றுச்சூழல் தினத்தின் கருத்துருவான சிறப்பான சுற்றுச்சூழலுக்காக  வேண்டி உயிரி எரிபொருட்களின் பயன்பாட்டை ஊக்குவித்தல்” என்பதற்கு இணங்க வெளியிடப் பட்டுள்ளது.

குறிப்பு

  • மேலும் பூனாவின் மூன்று இடங்களில் எத்தனால் வழங்கீட்டு மையங்களை அமைப்பதற்காக E-100 எனும் முதன்மைத் திட்டத்தினையும் பிரதமர் மோடி அவர்கள் தொடங்கி வைத்தார்.
  • 2025 ஆம் ஆண்டிற்குள் பெட்ரோலுடன் 20 சதவீதம் எத்தனாலைக் கலந்து பயன்படுத்துவதற்கான ஒரு இலக்கினை அரசு மாற்றியமைத்துள்ளது.
  • இதற்கு முன்பாக இந்த இலக்கை அடைவதற்கான கால நிர்ணயமானது 2030 ஆம் ஆண்டாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்