இரண்டாவது அடம்யா வகை விரைவு ரோந்துக் கப்பலான ICGS அக்சர், புதுச்சேரியின் காரைக்காலில் படையில் இணைக்கப்பட்டது.
இந்தக் கப்பலானது, கோவா ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தினால் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட உள்நாட்டுக் கூறுகளுடன் வடிவமைக்கப்பட்டு கட்டமைக்கப்பட்டது.
'அக்சர்', அதாவது 'அழியாதது' என்று பொருள்படும் இந்தக் கப்பலின் பெயரானது, கடலோரக் காவல்படையின் பாதுகாப்பான மற்றும் தூய்மையான கடல்களுக்கான அதன் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது.