இந்திய கடற்படைக் கப்பல் (INS) சாத்புரா என்ற கப்பலானது இந்தியாவின் 75வது ஆண்டு சுதந்திரத்தைக் கொண்டாடுவதற்காக வட அமெரிக்கக் கண்டத்தைச் சென்று அடைந்தது.
இந்தியாவின் சுதந்திர தினத்தன்று சான் டியாகோ அமெரிக்கக் கடற்படைத் தளத்தில் INS சாத்புரா கப்பலானது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவினை கொண்டாடும் விதமாக 75 சுற்றுகளை நிறைவு செய்தது.
INS சாத்புரா கப்பல் சான் டியாகோ அமெரிக்கக் கடற்படைத் தளத்திற்கு வருகை தந்தது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும்.
இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல் வட அமெரிக்காவின் மேற்குக் கடற்கரையை வந்தடைந்தது இதுவே முதல் முறையாகும்.