சுதந்திர தினத்தன்று, ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா என்ற அமைப்பானது, புவியில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் உயரத்தில் இந்தியத் தேசியக் கொடியை ஏற்றியது.
கொடியை ஏந்திச் சென்று வானில் விரியச் செய்த ஒரு பலூன் மூலம் புவியில் இருந்து 1 லட்சத்து 6 ஆயிரம் அடி உயரத்திற்குத் தேசியக் கொடி அனுப்பப்பட்டது.
ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா என்பது நாட்டிற்கான இளம் அறிவியலாளர்களை உருவாக்கி, எல்லைகளற்ற உலகம் குறித்த விழிப்புணர்வை குழந்தைகளிடையே பரப்புகின்ற ஓர் அமைப்பாகும்.
இந்த அமைப்பானது, சமீபத்தில் ஒரு செயற்கைக் கோளைப் புவி தாழ்மட்டச் சுற்றுப் பாதையில் ஏவியது.
சுதந்திரம் பெற்றதன் 75வது ஆண்டு நிறைவினைக் குறிக்கும் வகையில் இந்தியா முழுவதும் உள்ள 750 மாணவியரால் இந்த ஆசாதிசாட் உருவாக்கப் பட்டது.