நகோயா நெறிமுறையின் கீழ் 'சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட இணக்கச் சான்றிதழ்களை' (IRCCs) வழங்குவதில் இந்தியா உலக அளவில் முன்னணியில் உள்ளது.
ABS (அணுகல் மற்றும் பலன் பகிர்தல்) தீர்வகத்தில் பதிவுசெய்யப்பட்ட உலகளாவிய மொத்த 6,311 சான்றிதழ்களில், இந்தியா சுமார் 3,556 IRCC-களை வழங்கியுள்ளது.
நகோயா நெறிமுறையானது பல்லுயிர்ப் பரவல் குறித்த மாநாட்டுடன் தொடர்பு உடையது மற்றும் மரபணு வளங்களிலிருந்து கிடைக்கும் பலன்களை நியாயமாகப் பகிர்ந்து கொள்வதில் கவனம் செலுத்துகிறது.
மரபணு வளங்களைப் பயன்படுத்துவதற்கு 'முன்னதாக அறியப்படுத்தப்பட்ட ஒப்புதல்' மற்றும் 'பரஸ்பரமாக ஒப்புக் கொள்ளப்பட்ட விதிமுறைகள்' பின்பற்றப் பட்டதை IRCC-கள் உறுதிப்படுத்துகின்றன.
இந்தியாவின் பல்லுயிர் கட்டமைப்பில் பல்லுயிர் சட்டம் 2002, தேசியப் பல்லுயிர் ஆணையம், மாநிலப் பல்லுயிர் வாரியங்கள் மற்றும் பல்லுயிர் மேலாண்மை குழுக்கள் ஆகியவை அடங்கும்.
2017 மற்றும் 2025 ஆம் ஆண்டுக்கு இடையில், ABS ஒப்புதல்கள் மூலம் இந்தியா சுமார் ₹263 கோடியை ஈட்டியுள்ளது.