ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்ட அமைப்பானது, PM-POSHAN என்ற திட்டத்தின் செயல்திறனை மேம்படுத்தச் செய்வதற்காக பெங்களூருவைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
PM-POSHAN என்றால் பிரதான் மந்திரி போஷன் சக்தி நிர்மான் (Pradhan Mantri Poshan Shakti Nirman) என்பதாகும்.
இத்திட்டமானது இதற்கு முன்பு, மதிய உணவுத் திட்டம் என அழைக்கப்பட்டது.
இந்த ஒப்பந்தமானது அக்சய பாத்திரா என்ற ஒரு அறக்கட்டளையுடன் மேற்கொள்ளப் பட்டது.