அரசியல் கட்சிகள் தங்கள் விண்ணப்பங்களைக் கண்காணிக்க அனுமதிக்கும் வகையில் இந்தியத் தேர்தல் ஆணையமானது ஒரு ஆன்லைன் (நிகழ்நேர) முறையை அறிமுகப் படுத்தியுள்ளது.
இந்த அமைப்பானது அரசியல் கட்சிகள் பதிவு கண்காணிப்பு மேலாண்மை அமைப்பு (Political Parties Registration Tracking Management System - PPRTMS) என்று அழைக்கப் படுகின்றது.
அரசியல் கட்சிகளால் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை இந்த அமைப்பு கண்காணிக்க உள்ளது.
இந்த முறையின் மூலம் விண்ணப்பத்தின் நிலை குறித்த தகவல்களானவை குறுந்தகவல் அல்லது மின்னஞ்சல் மூலம் பெறப்படுகின்றன.