ஒடிசாவின் புவனேஸ்வரில் பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம் 'TribeX' தளத்தை அறிமுகப்படுத்தியது.
பழங்குடியினரின் கலை, கலாச்சாரம், மொழிகள் மற்றும் பாரம்பரிய அறிவு ஆகியவற்றிற்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்தியாவின் முதல் டிஜிட்டல் கற்றல் தளம் இதுவாகும்.
இது கட்டமைக்கப்பட்ட பாடநெறிகள், சான்றிதழ் திட்டங்கள் மற்றும் UGC அங்கீகாரம் பெற்ற முதுகலை (PG) பட்டயப் படிப்புகளை வழங்குகிறது.
இவற்றில் பழங்குடியின மொழியான சந்தாலியின் (ஓல் சிக்கி) ஒரு பாடநெறியும் அடங்கும்.
சமீபத்தில், ஓல் சிக்கி எழுத்துமுறையைப் பயன்படுத்தி சந்தாலி மொழியிலும் இந்திய அரசியலமைப்பு வெளியிடப்பட்டது.
இந்திய அரசியலமைப்பின் சந்தாலி மொழியிலான முதல் அதிகாரப்பூர்வ மொழி பெயர்ப்பு இதுவாகும்.
2003-ஆம் ஆண்டின் 92-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் சந்தாலி மொழி அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டது.
2025 ஆம் ஆண்டு டிசம்பர் 25 என்பது பண்டிட் ரகுநாத் முர்முவால் உருவாக்கப்பட்ட ஓல் சிக்கி எழுத்துமுறையின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் ஆண்டாகவும் அமைகிறது.