இந்தியா அண்டார்டிகாவிற்கு 40வது அறிவியல் பயணத்தைத் துவங்கியுள்ளது.
இது இக்கண்டத்திற்கான இந்தியாவின் 40 ஆண்டுகால அறிவியல் முயற்சியைக் குறிக்கிறது.
கோவாவிலிருந்து ஒரு பனி வகுப்புக் கப்பலான எம்.வி.வாசிலி கோலோவ்னின் (ice-class vessel MV Vasiliy Golovnin) என்ற கப்பல் மூலம் இந்தப் பயணம் தொடங்கப் பட்டு உள்ளது.
இந்தியா தனது அண்டார்டிக் ஆராய்ச்சிகளை 1981 ஆம் ஆண்டில் தொடங்கியது.
இந்தியா அண்டார்டிகா கண்டத்தில் மைத்ரி, தட்சிண கங்கோத்ரி மற்றும் பாரதி என்று 3 நிரந்தர ஆராய்ச்சி தளங்களைக் கட்டியுள்ளது.
தற்போது, அண்டார்டிகாவில் பாரதி மற்றும் மைத்ரி என்ற இரண்டு செயல்பாட்டு நிலையங்களை இந்தியா கொண்டுள்ளது.
கோவாவில் உள்ள துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையமானது மொத்த இந்திய அண்டார்டிக் திட்டத்தையும் நிர்வகிக்கின்றது.