ஆயுதப் படை மற்றும் துணை இராணுவப் படையைச் சேர்ந்த வீரர்களுக்கு 132 வீரதீர விருதுகள் மற்றும் இதர விருதுகளை இந்தியக் குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
இந்த விருதுகள் பின்வருமாறு : 2 கீர்த்தி சக்ரா விருதுகள், 1 வீர் சக்ரா விருது, 14 சௌவ்ரிய சக்ரா விருதுகள், 8 பார் சேனா விருதுகள் (வீரதீர), 90 சேனா விருதுகள் (வீரதீர), 5 நாவ் சேனா விருதுகள் (வீரதீர), 7 வாயு சேனா விருதுகள் (வீரதீர) மற்றும் 5 யுத் சேவா விருதுகளாகும்.
மேலும் இவர் இந்தியக் கடலோரக் காவற்படை வீரர்களுக்கு 8 தட்ராக்சக் விருதுகளையும் வழங்கினார்.
வீரதீர விருதுகள் ஒரு ஆண்டில் இரண்டு முறை அறிவிக்கப்படுகின்றன. ஒன்று குடியரசுத் தினத்தின் போதும் மற்றொன்று சுதந்திர தினத்தின் போதும் அறிவிக்கப்படுகின்றன.
2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 அன்று பாகிஸ்தானின் போர் விமானமான F-16ஐ சுட்டு வீழ்த்தியதற்காக விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமானுக்கு வீர் சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது.
கார்கில் போருக்குப் பின்பு இந்திய விமானப் படையின் முதலாவது வீர் சக்ரா விருது இதுவாகும்.
பிப்ரவரி 27 அன்று நடைபெற்ற தாக்குதலின் போது IAF விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வழிகாட்டியாகச் செயல்பட்ட IAF-ன் படைத் தளபதி மின்டி அகர்வாலுக்கு யுத் சேவா விருது வழங்கப்பட்டுள்ளது.
போர், மோதல் அல்லது விரோதத்தின் போது அவர்களுடைய தனித்துவமான சேவையை அங்கீகரிப்பதற்காக இந்த விருது வழங்கப்படுகின்றது.