TNPSC Thervupettagam

இந்தியக் காலநிலை மாற்ற அறிவுத் தளம்

December 1 , 2020 1696 days 746 0
  • மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சரான பிரகாஷ் ஜவ்டேகர் அவர்கள் காணொலி வாயிலாக இந்தத் தளத்தைத் தொடங்கி வைத்தார்.
  • இந்தத் தளமானது காலநிலை மாற்றப் பிரச்சினைகளைக் களைவதற்காக தேசிய மற்றும் சர்வதேச அளவில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்த முக்கியத் தகவல்களைக் கொண்டிருக்கும்.
  • 2015 ஆம் ஆண்டின் பாரிஸ் ஒப்பந்தத்தைச் சாதிக்கும் வகையில் செயல்படும் ஒரே ஜி20 நாடு இந்தியா ஆகும்.
  • 2020 ஆம் ஆண்டில் இந்தியாவானது, தனது ஜிடிபியில் 2005 ஆம் ஆண்டு நிலையிலிருந்து 21% என்ற அளவிலான உமிழ்வுத் திறனைக் குறைக்கும் தனது தன்னார்வ இலக்கை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.  
  • மேலும் இந்தியாவானது இலக்கு ஆண்டான 2030 ஆம் ஆண்டிற்கு முன்பாகவே 35% என்ற அளவிலான உமிழ்வுக் குறைப்பு என்ற இலக்கை அடையும் வகையில் செயல்பட்டு வருகின்றது.
  • இந்தியாவின் தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட 3 பங்களிப்புகள் பின்வருமாறு:
    • 2030 ஆம் ஆண்டில் ஜிடிபியின் உமிழ்வுத் தீவிரத்தை மூன்றில் 1 பங்காகக் குறைத்தல்.
    • புதை படிவமற்ற எரிபொருள் ஆதாரங்களிலிருந்துப் பெறப்படும் மின்சாரத்தின் நிறுவப்பட்ட உற்பத்தித் திறனாக 40% என்ற அளவினை அடைதல்.
    • கார்பன் டை ஆக்ஸைடின் 2.5 பில்லியன் முதல் 3 பில்லியன் டன்கள் வரையான கார்பன் சேமிப்புத் திறனுக்குச் சமமாக 2030 ஆம் ஆண்டில் மரங்கள் பரப்பிற்கான வனப் பரப்பை கூடுதலாக ஏற்படுத்துதல்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்