2021 ஆம் ஆண்டு ஜூலை 18 அன்று இந்தியாவின் ஜெய்நகருக்கும் நேபாளத்தின் குர்தா பகுதிக்கும் இடையேயான இரயில் பாதையின் சோதனை ஓட்டமானது வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
இந்த இரயில் பாதையின் மொத்த நீளம் 34.50 கிமீ ஆகும்.
இது இரு நாடுகளுக்கிடையேயான முதல் இரயில் பாதை இணைப்பாகும்
இது நேபாளத்தின் மஹோத்தாரி மாவட்டத்திலுள்ள குர்தா என்ற பகுதியினை பீகாரின் மதுபானி மாவட்டத்திலுள்ள ஜெய்நகருடன் இணைக்கின்றது.
இந்தியா-நேபாளம் நட்புறவு இரயில்பாதைத் திட்டத்தின் கீழ் ஜெய்நகர்-குர்தா இரயில்பாதையை IRCON நிறுவனம் அமைக்கிறது.
இதற்கு இந்திய அரசு நிதியுதவி அளிக்கிறது.
17 கி.மீ. நீளம் கொண்ட இரண்டாவது இரயில்பாதைஇணைப்பானது குர்தா பகுதியை பங்கஹா என்ற பகுதியுடன் இணைக்க உள்ளது.
17 கி.மீ. நீளமான மூன்றாவது இரயில்பாதை இணைப்பானது பங்கஹா பகுதியினைப் பர்திபாஸ் என்ற பகுதியுடன் இணைக்க உள்ளது.