TNPSC Thervupettagam

இந்தியா – பூடான் உறவுகள்

August 18 , 2019 2089 days 870 0
  • பூடானுக்கு தனது இரண்டாவது முறையாக  பயணத்தை மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் மங்கடெச்சு நீர்மின் ஆற்றல் ஆலையைத் திறந்து வைத்தார்.
  • இந்தியா மற்றும் பூடான் ஆகிய நாடுகளுக்கிடையே நீர்மின் துறையில் 50 ஆண்டு கால ஒத்துழைப்பை அனுசரிப்பதற்காக அஞ்சல் தலைகளை பிரதமர் வெளியிட்டுள்ளார்.
  • மேலும் இவர் பூடானில் ரூபே அட்டையையும் தொடங்கி வைத்தார்.
  • பூடானில் தெற்காசியச் செயற்கைக் கோளைப் பயன்படுத்துவதற்காக இஸ்ரோவின் உதவியுடன் உருவாக்கப்பட்ட புவிக் கட்டுப்பாட்டு மையம் மற்றும் சாட்காம் அமைப்பு ஆகியவற்றை மோடி மற்றும் லோடேய் ஷெரிங் (பூட்டானின் பிரதமர்) ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.
  • 1949 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 08 அன்று இந்தியா மற்றும் பூடான் ஆகிய நாடுகள் “சகோதரத்துவ ஒப்பந்தம்” ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
  • மீண்டும் 2007 ஆம் ஆண்டில் பூடானுடனான 1949 ஆம் ஆண்டு ஒப்பந்தம் குறித்து இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு புதிய சகோதரத்துவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.  
  • இந்தப் புதிய ஒப்பந்தமானது முழுமையான இறையாண்மையுடன் தனது வெளியுறவுக் கொள்கை மீதான இந்தியாவின் வழிகாட்டுதலை பூடான் மேற்கொள்ள வேண்டும் என்ற விதிமுறையை மாற்றியமைக்கின்றது.  மேலும் இந்த ஒப்பந்தமானது  ஆயுதங்கள் இறக்குமதிக்கான விவகாரத்தில் பூடான் இந்தியாவிடம் அனுமதி பெற வேண்டியதில்லை என்றும் கூறுகின்றது.
  • 2014 ஆம் ஆண்டில் இந்தியாவின் பிரதமராக மோடி பூடானுக்கு தனது முதலாவது வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டார்.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்