TNPSC Thervupettagam

காஷ்மீர் பிரச்சினை குறித்த இரகசிய ஆலோசனை – UNSC

August 17 , 2019 2087 days 741 0
  • ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய மத்திய அரசின் நடவடிக்கை குறித்து விவாதிப்பதற்காக ஒரு அரிய இரகசிய ஆலோசனையை (மூடப்பட்ட அறையில்) ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு மன்றம் (UNSC - United Nations Security Council) நடத்தியது.
  • பாகிஸ்தானால் வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் “காஷ்மீர் பிரச்சினை மீதான இரகசிய ஆலோசனை” நடத்தப்பட்டது. இந்தக் கோரிக்கையை சீனா ஆதரித்தது.
  • UNSC சந்திப்பின் முடிவுகள் முறையான அறிவிப்பாக இல்லாமல் இரகசிய ஆலோசனையாக (Informal in nature) அமைந்தது.
  • ஆகஸ்ட் மாதத்திற்கான பாதுகாப்பு மன்றத்தின் தலைமை போலந்து நாட்டிடம் உள்ளது.
  • பெல்ஜியம், கோட்டி டி ஐவரி, டொமினிக்கன் குடியரசு, எக்குவடோரியல் கினியா, ஜெர்மனி, இந்தோனேஷியா, குவைத், பெரு, போலந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகியவை UNSC-ல் தற்பொழுது தற்காலிக உறுப்பு நாடுகளாக அங்கம் வகிக்கின்றன.
  • காஷ்மீர் பிரச்சினை குறித்து UNSCன் ஒரு முழுச் சந்திப்பானது கடைசியாக 1965 ஆம் ஆண்டில் நடைபெற்றது.

Image result for section 370
Post Views:
741

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்