மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கனிம வளம் நிறைந்த ஒடிசா, கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு ஆதரவளிக்க முன்மொழிந்தார்.
இந்தியாவின் அரிய மண் காந்தங்களுக்கான விநியோகத்தைப் பாதுகாக்கும் நோக்கில், பிரத்தியேக அரிய மண் தாதுப் பெருவழித்தடங்கள் நிறுவப்பட உள்ளன.
அரிய மண் தாதுக்களுக்காக சீனா மீதான தனது சார்புநிலையைக் குறைக்க இந்தியா முயற்சிக்கும் வேளையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 2025-ல், மத்திய அரசு, இந்தியாவில் அரிய மண் நிரந்தரக் காந்தங்களை (REPM) உற்பத்தி செய்வதற்காக, ₹7,280 கோடி நிதி ஒதுக்கீட்டில் ஒரு புதிய, 'முதன்முறையான' திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.
'வெப்பப் படுத்தப் பட்ட அரிய மண் நிரந்தரக் காந்தங்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டம்' என்பது, இந்தியாவில் ஆண்டுக்கு 6,000 மெட்ரிக் டன் ஒருங்கிணைந்த அரிய மண் நிரந்தரக் காந்த (REPM) உற்பத்தியை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டது.