TNPSC Thervupettagam

இந்தியாவின் மிகப்பெரிய கிராம அளவிலான தொலைத்தொடர்பு வலையமைப்பு செயல்திறன் கணக்கெடுப்பு

July 27 , 2026 15 hrs 0 min 15 0
  • இந்த அகில இந்தியக் கணக்கெடுப்பானது, தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள அஞ்சல் துறை மற்றும் டிராய் (TRAI) ஆகியவற்றின் ஒரு கூட்டு முயற்சியாகும்.
  • 5.68 லட்சம் கிராமங்களில் இந்தியாவின் மிகப்பெரிய கிராம அளவிலான தொலைத் தொடர்பு வலையமைப்பு செயல்திறன் கணக்கெடுப்பை நடத்துவதே இதன் நோக்கம் ஆகும்.
  • 1.4 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராம அஞ்சல் ஊழியர்கள் (கிராமப்புற அஞ்சல் பணியாளர்கள்), வழக்கமான விநியோகங்களின் போது, டிராய் உருவாக்கிய ஆண்ட்ராய்டு செயலியைப் பயன்படுத்தி ஏர்டெல், ஜியோ, VI மற்றும் BSNL ஆகியவற்றின் பரவலை மதிப்பிடுவார்கள்.
  • "பரவல் இல்லாத பகுதிகளை" அடையாளம் காணவும், எதிர்கால தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு முதலீடுகளுக்கு வழிகாட்டவும், நுணுக்கமான கள அளவிலான தரவுகளை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்