TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் பல்முனை முனையம்

November 14 , 2018 2456 days 809 0
  • பிரதமர் வாரணாசியில் கங்கை ஆற்றில் நாட்டின் முதல் பல்முனை முனையத்தை திறந்து வைத்தார்.
  • இது நான்கு பல்முனை முனையங்களில் முதலாவதாகும்.
  • கங்கை ஆற்றின் முதல் பல்முனை நீர்வழி முனையமானது மத்திய அரசின் ஜல் மார்க் விகாஸ் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
  • இது வாரணாசிக்கும் ஹால்தியாவிற்கும் இடையிலான தூரத்தை பெரிய கப்பல்கள் செல்லும் அளவிற்கு மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகும்.
  • தேசிய நீர்வழிப்பாதை - 1 (ஹால்தியா - வாரணாசி) ஆனது உலக வங்கியின் தொழில்நுட்ப மற்றும் முதலீட்டு உதவியுடன் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
  • இந்த திட்டத்தின் மொத்த மதிப்பீட்டு செலவு (5369.18 கோடி) இந்திய அரசு மற்றும் உலக வங்கியால் சமமாக பகிர்ந்து செலவழிக்கப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்