தேசியப் பண்டங்கள் மற்றும் வகையீடுகள் பரிவர்த்தனை மையமானது (NCDEX), 'RAINMUMBAI' எனப்படும் இந்தியாவின் முதல் இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (SEBI) ஒப்புதல் பெற்ற வானிலை வகையீடு ஒப்பந்தத்தை அறிமுகப் படுத்தியது.
இந்த ஒப்பந்தம் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான பருவமழைக் காலத்தில் மும்பையில் பெய்யும் மழையுடன் தொடர்புடையதாகும்.
வானிலை வகையீடுகள் என்பவை வானிலை நிலைமைகளில் ஏற்படும் மாற்றங்களால் உருவாகும் அபாயங்களை நிர்வகிக்கப் பயன்படும் நிதி ஒப்பந்தங்கள் ஆகும்.
இந்த ஒப்பந்தம் இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (IMD) அதிகாரப்பூர்வ மழைப் பொழிவுத் தரவைப் பயன்படுத்துகிறது.
இந்தியத் தொழில்நுட்பக் கழகம் பாம்பேவுடன் இணைந்து NCDEX இந்த ஒப்பந்தத்தை உருவாக்கியுள்ளது.