TNPSC Thervupettagam

இந்தியாவில் பால்வளத் துறை 2025

October 8 , 2025 11 days 54 0
  • கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் பால்வளத் துறையானது 70% விரிவடைந்துள்ளது.
  • பால் உற்பத்தியானது, 2014-15 ஆம் ஆண்டில் 146 மில்லியன் டன்னிலிருந்து 2023-24 ஆம் ஆண்டில் 239 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது.
  • 2029 ஆம் ஆண்டிற்குள் 75,000க்கும் மேற்பட்ட பால் கூட்டுறவுகளை நிறுவ அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது.
  • மூன்று புதிய பல மாநிலக் கூட்டுறவு சங்கங்கள் அங்கீகரிக்கப் பட்டுள்ளன:
    • அவற்றுள் ஒன்று கால்நடை தீவன உற்பத்தி, நோய் கட்டுப்பாடு மற்றும் செயற்கை கருவூட்டல் ஆகியவற்றிற்காகவும்;
    • இரண்டாவது மாட்டு சாண மேலாண்மை மாதிரிகளை உருவாக்குவதற்காகவும்
    • மூன்றாவது இறந்த கால்நடை பாகங்களை சுழற்சி முறை வடிவில் பயன்படுத்துவதற்காகவும் ஆகும்.
  • ஹரியானாவில் புதிதாக திறக்கப்பட்ட சபர் பால் பண்ணையானது, தயிர், மோர் மற்றும் யோகர்ட் ஆகியவற்றிற்கான இந்தியாவின் மிகப்பெரிய உற்பத்தி அலகு ஆகும்.
  • 2028-29 ஆம் ஆண்டிற்குள் 100 மில்லியன் லிட்டரை எட்டும் இலக்குடன் இந்தியாவின் பால் பதப்படுத்தும் திறன் ஆனது தற்போது ஒரு நாளைக்கு 660 லட்சம் லிட்டராக உள்ளது.
  • தனி நபருக்கான பால் கிடைக்கும் தன்மை 124 கிராமிலிருந்து 471 கிராமாக அதிகரித்து ள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்