வடக்கு, மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் நிலவிய கடுமையான வெப்ப அலை காரணமாக, 2026 ஆம் ஆண்டு மே 22 அன்று உலகின் 100 வெப்பமான நகரங்களில் 97 நகரங்கள் இந்தியாவில் பதிவாகின.
ஒடிசாவின் பலங்கிர் மற்றும் பீகாரின் சசாரத்தில் 48°C வெப்பநிலையும், உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் 47°C வெப்பநிலையும் பதிவாகியது.
முன்னதாக அதே நாளில், உலகின் 50 வெப்பமான நகரங்களும் இந்தியாவில் தான் இருந்தன.
வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் 2026 ஆம் ஆண்டு மே 27 வரை வெப்ப அலை முதல் கடுமையான வெப்ப அலை நிலைகள் தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது.
வெப்ப அலை என்பது பல நாட்களுக்கு நீடிக்கும் அசாதாரண அதிக வெப்பநிலை காலமாகும், மேலும் இது வெப்பநிலை வரம்புகள் மற்றும் சாதாரண நிலையில் இருந்து ஏற்படும் விலகல் ஆகியவற்றைப் பயன்படுத்தி IMD ஆல் வகைப்படுத்தப் படுகிறது.
6-8% என்ற குறைந்த ஈரப்பத அளவுகளுடன், தீவிர வெப்பநிலையும் சேர்ந்து வெப்ப அழுத்தம், நீர்ச்சத்து குறைபாடு மற்றும் வெப்பத்தால் ஏற்படும் வலிப்பு ஆகியவற்றின் அபாயங்களை அதிகரித்துள்ளது.