இந்தியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து 2023 ஆம் ஆண்டு வரை தொடர உள்ள மூன்றாண்டு கூட்டுச் செயல் திட்டம் ஒன்றைத் தொடங்கியுள்ளன.
இந்தக் கூட்டுச் செயல் திட்டமானது வேளாண்மையில் ஒத்துழைப்பினை அதிகரிக்கும் நோக்கில் தொடங்கப் பட்டுள்ளது.
இந்தப் புதிய செயல்திட்டத்தின் கீழ்,
இஸ்ரேலிய நாட்டின் வேளாண் மற்றும் நீர்ப்பாசன தொழில் நுட்பங்கள் பற்றி இந்திய விவசாயிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 13 சிறப்பு நிறுவனங்கள் நிறுவப்படும்.
8 மாநிலங்களில் 75 கிராமங்களுக்குள் “சிறப்புக் கிராமங்கள்” எனும் வேளாண் முன்மாதிரி சூழலமைப்புகள் உருவாக்கப்படும்.
இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான வேளாண் துறை சார்ந்த இரு தரப்பிலான உறவுகள் 1993 ஆம் ஆண்டில் தொடங்கியது.
இந்தப் புதிய திட்டமானது 5வது இந்திய-இஸ்ரேலிய வேளாண் செயல்திட்டமாகும்.