நிலக்கரி சார்ந்த அனல் மின் நிலையங்களில் உயிரிப் பொருட்களை பயன்படுத்துவது மீதான ஒரு தேசியத் திட்டத்தினை அமைக்க உள்ளதாக மத்திய ஆற்றல் அமைச்சகம் அறிவித்துள்ளது.
விவசாயத் தாளடி எரிப்பினால் ஏற்பட்ட காற்று மாசுபாட்டுப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் நோக்கில் இந்த முடிவானது மேற்கொள்ளப் பட்டுள்ளது.
இந்தத் திட்டமானது வழிகாட்டுக் குழுவினால் (Steering Committee) நிர்வகிக்கப்படும்.
வழிகாட்டுக் குழுவானது ஆற்றல்துறை செயலாளரைத் தலைமையாகக் கொண்ட பெட்ரோலியம் மற்றும் புதிய & புதுப்பிக்கத்தக்க ஆற்றல்துறை அமைச்சகத்தின் பிரதிநிதிகள், பங்குதாரர்கள் உள்ளிட்ட அனைவரையும் உள்ளடக்கிய ஒரு குழு ஆகும்.