இயற்பியலுக்கான நோபல் பரிசானது, ஜான் கிளார்க், மைக்கேல் H. டெவோரெட் மற்றும் ஜான் M. மார்டினிஸ் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.
அவர்களுக்கு "மின் சுற்றுகளில் பெரிய அளவிலான குவாண்டம் இயந்திர ஊடுருவல் மற்றும் ஆற்றல் அளவீட்டைக் கண்டுபிடித்ததற்காக" இந்த விருதானது வழங்கப் படுகிறது.
இது குவாண்டம் மறைகுறியாக்கம், குவாண்டம் கணினிகள் மற்றும் குவாண்டம் உணர்வுக் கருவிகள் உள்ளிட்ட அடுத்தத் தலைமுறை நுட்பத்திலான குவாண்டம் தொழில் நுட்பத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை வழங்கியுள்ளது.