உலகின் உயரமான நடமாடும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு கோபுரங்கள்
August 13 , 2021 1842 days 738 0
லடாக் பகுதியிலுள்ள மேம்படுத்தப்பட்ட தரையிறக்கத் தளத்தில் உலகின் உயரமான நடமாடும் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டுக் கோபுரங்களுள் ஒன்றை இந்திய விமானப் படை கட்டமைத்துள்ளது.
இந்தக் கட்டுப்பாட்டு கோபுரங்கள் கிழக்கு லடாக் பகுதியில் இயங்கும் நிலையான இறக்கையுடைய விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவதில் உதவும்.
மேலும், கிழக்கு லடாக் பகுதியில் MiG-29 மற்றும் ரஃபேல் உள்ளிட்ட போர் விமானங்களையும் இந்திய விமானப் படை பணியமர்த்தி வருகிறது.