செனாப் மேம்பாலம், இந்தியாவிலுள்ள ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள பக்கலுக்கும் கவுரிக்கும் இடையில் இந்திய இரயில்வேயினால் கட்டப்பட்டு வரும் ஒரு எஃகு மற்றும் கான்கிரீட் வளைவு மேம்பாலமாகும்.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள செனாப் ஆற்றின் மீது கட்டப்பட்டு வரும் உலகின் இந்த மிக உயரமான இரயில் பாலம் அதன் கடைசி கட்டக் கட்டுமானப் பணி நிலையில் உள்ளது.
இந்த இரயில் பாதை பாரீஸில் உள்ள ஈபிள் கோபுரத்தை விட 35 மீட்டர் உயரமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
கட்டி முடிக்கப் பட்ட பிறகு, இது சீனாவில் உள்ள பீப்பன் நதியிலமைந்த சுய்பாய் இரயில் பாலத்தின் (275 மீ) சாதனையை முறியடிக்கும்.
இது செனாப் நதிப் படுகையிலிருந்து 359 மீட்டர் உயரத்தில் இருக்கும்.
இந்தப் பாலத்தின் ஒட்டு மொத்த நீளம் 1,315 மீட்டர் ஆகும்.