சுவிட்சர்லாந்தில் உள்ள ETH சூரிச் பல்கலைக்கழக இயற்பியலாளர்கள், குவாண்டம் சிக்கலின் உதவியுடன் உலகின் முதல் சான்றளிக்கப்பட்ட 'துல்லியமான சீரற்ற தன்மையை' அடைந்துள்ளனர்.
இந்தச் சாதனை முற்றிலும் கணிக்க முடியாத சீரற்ற எண்களை உருவாக்க, பின்னிப்பிணைந்த குவாண்டம் பிட்கள் (கியூபிட்கள்) மற்றும் பெல்-பரிசோதனை போன்ற சோதனைகளைப் பயன்படுத்தியது.
சீரற்ற தன்மையைச் சரிபார்க்க ஆராய்ச்சியாளர்கள் சுமார் ஒன்பது மணி நேரத்தில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான சோதனைகளை நடத்தினர்.
இந்த முறை 'சீரற்ற தன்மையைப் பெருக்கும்' செயல்பாட்டை நிரூபித்ததுடன், இது குறைபாடுள்ள சீரற்ற தன்மையை முற்றிலும் துல்லியமான சீரற்ற வெளியீடுகளாக மாற்றியது.
வழக்கமான மின்னாக்கிகள்/ஜெனரேட்டர்களைப் போலல்லாமல், இந்த அமைப்பு கருவிகளைச் சார்ந்திருக்காதது, இது வன்பொருள்களை நம்பியிருக்காமல் குவாண்டம் நடத்தையை மட்டுமே நம்பியுள்ளது.