TNPSC Thervupettagam
September 5 , 2025 15 hrs 0 min 30 0
  • ஈரோடு மாவட்டத்தில் உள்ள எலத்தூர் ஏரி, தமிழ்நாட்டின் மூன்றாவது பல் வகைமை கொண்ட பாரம்பரியத் தளமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • 37.42 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ள இந்த ஏரியானது, 2002 ஆம் ஆண்டு உயிரியல் பன்முகத்தன்மை சட்டத்தின் 37(1) என்ற பிரிவின் கீழ் பாதுகாக்கப்படுகிறது.
  • எலத்தூர் ஏரியானது, வலசை போகும் மற்றும் அங்கேயே காணப்படும் பறவைகள் உட்பட 187 வகையான பறவைகளை ஆதரிக்கிறது.
  • உச்சகட்ட வலசை போகும் பருவங்களில் 5,000 பறவைகள் வரை இந்த ஏரியில் கூடுகின்றன.
  • புல்வெளிக் கழுகு (ஸ்டெப்பி கழுகு) போன்ற அருகி வரும் இனங்கள் மற்றும் ஆற்று ஆலா மற்றும் பெரும்புள்ளிக் கழுகு போன்ற எளிதில் பாதிக்கப்படக் கூடிய இனங்கள் இங்கு காணப்படுகின்றன.
  • இந்த இடமானது, ஆசிய வெண்கழுத்து நாரை மற்றும் இந்திய வெள்ளை அரிவாள் மூக்கன் போன்ற அருகி வரும் பறவைகளுக்கும் தாயகமாக உள்ளது.
  • இதில் ஆழமான மற்றும் ஆழமற்ற நீர்நிலைகள், சதுப்பு நிலம், வறண்ட புதர் நிலம், சேற்று நிலங்கள் மற்றும் பாறை நிலப்பரப்பு போன்ற வாழ்விடங்கள் அடங்கும்.
  • இதன் மற்ற பல்லுயிர்ப் பெருக்கத்தில் 38 தாவர இனங்கள், 35 வண்ணத்துப் பூச்சி இனங்கள், 12 தும்பி இனங்கள், 12 ஊர்வன, 7 பாலூட்டிகள் மற்றும் பல்வேறு இரு வாழ்விகள், மீன்கள் மற்றும் முதுகெலும்பில்லாத உயிரினங்கள் அடங்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்