குடியரத் தலைவர் ராம் நாத் கோவிந்த் அவர்கள் டெல்லியில் இருந்து திருப்பதி வரை ஏர் இந்தியா ஒன்-B 777 விமானம் மூலமான முதல் அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
ஏர் இந்தியா ஒன் என்பது இந்தியாவின் வி.வி.ஐ.பி. விமான வகையாகும்.
இந்த விமானத்தை இந்தியாவின் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் பிரதமர் போன்றோர் பயன்படுத்த உள்ளனர்.
இதே போன்று வி.வி.ஐ.பிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த பி 747-400 விமானத்தை விடவும் இது அதிக தூர வரம்பைக் கொண்டுள்ளது.
புதுடில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அமைந்துள்ள இந்திய விமானப்படை விமானத் தலைமையகத் தகவல் தொடர்புப் படையால் இது இயக்கப்பட உள்ளது.
இது ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு வசதிகளுடன் பொருத்தப்பட்டுள்ளது.
இவ்வாறாக நிறுவப்பட்ட இந்தப் பாதுகாப்பு அமைப்பானது ஏர் இந்தியா ஒன் விமானத்தினை அமெரிக்காவின் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்திற்கு இணையாகக் கொண்டு வருகிறது.
இந்தியாவின் முதல் மூன்று அரசப் பிரமுகர்களை ஏற்றிச் செல்லும் இந்த வகையிலான மூன்று விமானங்களுக்கு ராஜ்தூத், ராஜ்ஹன்ஸ் மற்றும் ராஜ்கமல் என்று பெயரிடப் பட்டுள்ளது.