கொச்சி தளத்தில், ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல் இந்தியக் கடற்படையில் இணைக்கப் பட்டதைக் குறிக்கும் வகையில் அங்கு அமைக்கப்பட்டுள்ள ஒரு நினைவுப் பலகையை பிரதமர் மோடி அவர்கள் திறந்து வைத்தார்.
இந்தக் கப்பலானது, இந்தியக் கடற்படையின் உள்நாட்டுப் போர்க்கப்பல் வடிவமைப்பு வாரியத்தினால் (WDB) வடிவமைக்கப்பட்டு, துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள பொதுத்துறை கப்பல் கட்டும் நிறுவனமான கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் மூலம் கட்டமைக்கப்பட்டது.
இந்தியாவின் கடற்படை வரலாற்றில் இதுவரை கட்டமைக்கப்பட்ட, இரண்டு கால்பந்து மைதானங்களின் அளவிலான மிகப்பெரிய கப்பல் இதுவாகும்.
இது 7,500 கடல் மைல்கள் தொலைவு வரை பயணிக்கும் திறனுடன், அதிகபட்சமாக 28 நாட் வேகம் இயங்கக் கூடிய வகையில் (ஒரு மணி நேரத்திற்கு 52 கி.மீ.) வடிவமைக்கப் பட்டுள்ளது.
இது 20,000 கோடி ரூபாய் செலவில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இது 262 மீட்டர் நீளமுடையக் கப்பலாகும்.
45,000 டன் எடை கொண்ட இந்தப் போர்க்கப்பலானது ரூ. 20,000 கோடி செலவில் கட்டமைக்கப் பட்டுள்ளது.
இது 18 மாடிகளைக் கொண்ட ஒரு மிதக்கும் நகரம் என்று அழைக்கப்படுகிறது.
அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் இத்தகையப் பெரிய போர்க் கப்பல்களை உருவாக்கும் திறன் பெற்றுள்ளன.