ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்திய அரசின் தலைமை
December 6 , 2022 944 days 453 0
டிசம்பர் 01 ஆம் தேதியன்று, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் (UNSC) மாதாந்திர சுழற்சி முறை தலைமைப் பதவியை இந்தியா ஏற்றுக் கொண்டது.
2021-22 ஆம் ஆண்டில் அச்சபையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக இந்தியாவின் இரண்டு ஆண்டு கால பதவிக் காலத்தில் இந்தியா இவ்வாறு பொறுப்பேற்பது இது இரண்டாவது முறையாகும்.
இந்தியா முன்னதாக 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தலைமைப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டது.
வெளி விவகாரங்கள் துறை அமைச்சரும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்ஸும் டிசம்பர் 14 ஆம் தேதியன்று ஐக்கிய நாடுகள் சபையில் M.K.காந்தி அவர்களின் மார்பளவு உயரம் உள்ள சிலையைத் திறந்து வைக்க உள்ளார்.
இந்தத் தினமானது காந்தி அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்திற்கு வருகைத் தந்ததைக் குறிக்கிறது.
சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுவதற்கான உறுதிப்பாட்டினைக் கொண்ட ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை, உலகளாவியப் பலதரப்பு உறவுகளின் மையப் பகுதியாகும்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையானது, 15 உறுப்பினர் நாடுகளைக் கொண்டது : அவற்றுள் 5 நிரந்தர மற்றும் 10 நிரந்தரமற்ற உறுப்பினர் நாடுகள் ஆகும்.
பத்து நிரந்தரமற்ற உறுப்பினர் நாடுகள் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் இரண்டு வருட காலத்திற்கு உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப் படுகின்றன.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இந்தியா ஏழு முறை நிரந்தரமற்ற உறுப்பினராகப் பணியாற்றியுள்ளது.
2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், இந்தியா எட்டாவது முறையாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இடம் பெற்றது.