TNPSC Thervupettagam

ஒற்றுமைக்கான சிலை திறப்பு

November 2 , 2018 2459 days 969 0
  • இந்தியாவின் முதல் துணைப் பிரதமரும் முதல் உள்துறை அமைச்சருமுமான சர்தார் வல்லபாய் படேலின் 143வது பிறந்த நாளான அக்டோபர் 31 அன்று அவரின் 182 மீட்டர் உயர சிலையான “ஒற்றுமைக்கான சிலையை” பிரதமர் திறந்து வைத்தார்.
  • இந்தச் சிலையானது சுதந்திர தேவி சிலையின் அளவில் இருமடங்கு உயரமுடையதும் உலகின் மிக உயரமான சிலையுமாகும்.
  • இது 2989 கோடி ரூபாயில் குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் நர்மதா அணையின் 3.2 கி.மீ. கீழ்நிலையில் கட்டப்பட்டுள்ளது.
  • இந்தச் சிலையானது, பத்மபூஷன் விருது பெற்ற சிற்பியான ராம் வி சுதரால் வடிவமைக்கப்பட்டு லார்சன் & ட்யூப்ரோ மற்றும் மாநில அரசின் நிறுவனமான சர்தார் சரோவர் நர்மதா நிகாம் லிமிடேட் ஆகியவற்றால் கட்டப்பட்டது.
  • இது சீனாவின் மத்திய ஹெனான் மாகாணத்தில் உள்ள தற்போதைய உலகின் மிக உயரமான வசந்த கால புத்தர் கோவிலை விட 177 அடிகள் அதிக உயரமுடையதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்