November 28 , 2022
900 days
451
- 600 மெகாவாட் திறன் கொண்ட கமெங் நீர் மின் நிலையத்தைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.
- இது அரசுக்குச் சொந்தமான வடகிழக்கு மின்சார கழகத்தினால் (NEEPCO) உருவாக்கப் பட்டது.
- இது அருணாச்சலப் பிரதேசத்தின் மேற்கு கமெங் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
- இது கமெங் நதியின் துணை நதிகளான பிச்சோம் மற்றும் தெங்கா நதிகளின் நீரோட்டத்தினை மின்சார உற்பத்திக்குப் பயன்படுத்துகிறது.
- இந்தியாவின் நீர் மின் ஆற்றலில் 40% அருணாச்சலப் பிரதேசத்தில் உற்பத்தி செய்யப் படுகிறது.
- எனவே, இந்த மாநிலம் "இந்தியாவின் ஆற்றல் மையமாக" கருதப்படுகிறது.

Post Views:
451