தமிழ்நாடு கல்வி அமைச்சர் பள்ளிகளில் குடிநீர் மணி (Water Bell) திட்டத்தைத் தொடங்கி வைத்து உள்ளார்.
இது மாணவர்கள் தொடர்ந்து குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் குடித்து மிக நன்கு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதை ஊக்குவிக்கும் நோக்கத்தைக் கொண்டு தொடங்கப் பட்டுள்ளது.
இந்தத் திட்டமானது 2025 ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் தேதியன்று செயல்படுத்தப்பட்டது.
அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளும் இதைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளன.
ஒரு சிறப்புத் தண்ணீர் இடைவேளை மணியானது காலை 11 மணி, பிற்பகல் 1 மணி மற்றும் பிற்பகல் 3 மணிக்கு என ஒரு நாளைக்கு மூன்று முறை ஒலிக்கும்.
இந்த மணி ஓசையானது, வழக்கமான பள்ளி இடைவேளை மணிகளிலிருந்து நன்கு வேறுபட்டதாக இருக்கும்.
மாணவர்கள் வகுப்பறைகளுக்குள் தண்ணீர் குடிக்க 2-3 நிமிடங்கள் வழங்கப்படும்.
தண்ணீர் இடைவேளை நேரத்தில் வெளியே செல்லக் கூடாது.
மாணவர்கள் தங்கள் சொந்தத் தண்ணீர் குடுவைகளைக் கொண்டு வர வேண்டும்.
கேரள மாநில அரசானது கடந்த ஆண்டு இந்தத் திட்டத்தினைச் செயல்படுத்தியது.