TNPSC Thervupettagam

கேரளாவில் பொன்னிற குள்ளநரிகள்

August 3 , 2025 4 days 42 0
  • கேரளாவின் பொன்னிறக் குள்ளநரிகளின் (கேனிஸ் ஆரியஸ் நரியா) எண்ணிக்கை 20,000 முதல் 30,000 வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • 2,200க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன் சுமார் 900 கிராமங்களில் மேற்கொள்ளப் பட்ட இந்த ஆய்வில் மாநிலம் முழுவதும் 5,000 நரிகள் பதிவு செய்யப்பட்டது.
  • பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளில் 2 சதவீதம் மட்டுமே பதிவாகின, என்பதோடு அதில் பெரும்பாலானவை 200 மீட்டருக்கும் குறைவான உயரத்தில் உள்ள தாழ்வான பகுதிகளில் இருந்தன.
  • தென்னை தோப்புகள் (24 சதவீதம்), கிராமப்புறக் குடியிருப்புகள் (10 சதவீதம்), நெல் வயல்கள் (8 சதவீதம்), இரப்பர் தோட்டங்கள் (6 சதவீதம்) மற்றும் நகர்ப்புறங்கள் (5.6 சதவீதம்) ஆகியவை அவற்றின் விருப்பமான வாழ்விடங்களில் அடங்கும்.
  • கண்ணூர், கோழிக்கோடு, திருச்சூர், எர்ணாகுளம் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய சில இடங்களில் அவை அடிக்கடி தென்படுகின்றன, ஆனால் மேற்குத் தொடர்ச்சி மலைகள், ஆலப்புழா கடற்கரை மற்றும் அட்டப்பாடியில் பொருத்தமற்ற வாழ்விடங்கள் காரணமாக அவை குறைவாகவே காணப்படுகின்றன.
  • மூணாறு மற்றும் எராவிக்குளம்/இரவிகுளம் தேசியப் பூங்காவில் தனிமைப் படுத்தப் பட்ட குழு காணப்படுகிறது என்பதோடு இது அதிக உயரமுள்ளப் பகுதிகளுக்கான அவற்றின் ஓரளவிலான தகவமைப்பினைக் காட்டுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்