இந்த செயலியானது மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தினால் மேம்படுத்தப் பட்டுள்ளது.
தற்பொழுது இந்திய உச்ச நீதிமன்றமானது தினசரி அடிப்படையில் உயிரி மருத்துவக் கழிவுகளைக் கண்காணிப்பதற்காக “கோவிட் – 19 BWM செயலியை” பயன்படுத்துமாறு அனைத்து நகராட்சிக் கழகங்கள் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களைக் கட்டாயப் படுத்தியுள்ளது.
இது கழிவுகள் உரிய முறையில் சேகரிக்கப்பட்டு, எடுத்துச் செல்லப்பட்டு, பதிவு செய்யப்பட்ட பொது உயிரி மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நிலையத்திற்குச் சென்றடைவதை உறுதி செய்கின்றது.